உதகையில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்
உதகையில் சுற்றுலா வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
ஊட்டி: உதகையில் சுற்றுலா வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேலூரைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை கண்டுகளிக்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் வேலூரைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது தட்டபள்ளம் என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 20 பேர் கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications