நெல்லை: டெங்கு காய்ச்சலுக்கு 7 மாதக் கைகுழந்தை பலி – 10 பேர் மருத்துவமனையில்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு சுரண்டை அருகே மேலகலங்கல் பகுதியில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்ததால் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு இரவு உயிரிழந்தது.

கடந்த வாரம் அதே பகுதயைச் சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழந்ததால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் பலர் பலியாக நேரிடுமோ என்று அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலகலங்கல், குறுந்தல்குழி பகுதியில் 100 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவி உள்ள நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications