ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணியிடம் சிக்கிய 700 கிராம் தங்கம்
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கிராம் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கிராம் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேராள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிராபாகரன் என்பவர் ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் வூஃபர் பாக்ஸ் எனப்படும் ஒலிப்பெருக்கி பெட்டியில் வளைய வடிவிலான தங்க கட்டிகளை கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை விமான நிலையம் வந்த அவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் சுமார் 700 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்ததையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications