கோவையை சேர்ந்த 8 அதிமுக எம்எல்ஏக்களை காணோம்... அதிமுகவினரே புகார்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 8 அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என அக்கட்சியினர் புகார் அளித்துள்ளாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த 8 அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி அதிமுகவினரே இந்த புகாரை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையேயான முதல்வர் இருக்கைக்கான மோதல் முற்றியுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு பெருகும் ஆதரவைக் கண்டு பீதியடைந்துள்ள மன்னார்குடி கும்பல் அதிமுக எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் பதுக்கி சிறை வைத்துள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை காணவில்லை என புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மாநகராட்சியின் 52 வது வார்டு அதிமுக துணை செயலாளராக உள்ளார்.
இவர் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அதிமுக எம்எல்ஏக்களை மீட்டு தரக்கோரி, கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார். அதில் கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டசபை உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டசபை உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபை உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜை காணவில்லை என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவினரே அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என புகார் அளித்துள்ளாதால் அவர்களை பதுக்கி வைத்துள்ள மன்னார்குடி கும்பலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications