நெல்லை, தூத்துக்குடியில் 8 நீதிபதிகள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 8 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் 58 பேருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்ட நீதிபதிகள் 6 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் 72 நீதிபதிகளுக்கு பதவு உயர்வும், பணியிட மாறுதலும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நீதிபதிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி சிறப்பு சார்பு நீதிபதி சாந்தி செழியன் தஞ்சை முதன்மை சார்பு நீதிபதியாகவும், தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி பாலகுமார் பொள்ளாச்சி சார்பு நீதிபதியாகவும், தென்காசி முதன்மை சார்பு நீதிபதி மணிவண்ணன் பட்டுகோட்டை முதன்மை சார்பு நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலியாக இருந்த தலைமை குற்றவியல் நீதிபதி பதவிக்கு புதுக்கோட்டை சார்பு நீதிபதி தனியாக மாற்றப்பட்டுள்ளார்.

நாகர்கோவிலில் கூடுதல் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜூ நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் தூத்துக்குடியில் காலியாக இருந்த தலைமை குற்றவியில் நீதிபதி பதவிக்கு சேலம் மாநகராட்சி வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் சீத்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் அப்துல் மாலிக் சென்னை 17வது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கலையரசன் பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+