சட்டசபை தேர்தல்: அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி- 8 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் மூலமாக சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பெண் உள்ளிட்ட 8 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்றும், எத்தனை லட்சம் செலவழித்தாவது எம்.எல்.ஏ வேட்பாளராகிவிடவேண்டும் என்றும் அதிமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

8 person arrested for cheating ADMK sheet aspirants

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஆயிஷா, அதிமுகவை சேர்ந்த பல அமைச்சர்களை தனக்கு தெரியும் என்று கூறி வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தவர். இவரிடம் தனது உறவினர் ஒருவரின் வேலைக்காக திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பவர் சரவணன் பணம் கொடுத்து ஏமாந்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தம்பி திவாகரனிடம் சொல்லி, வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் வாங்கித்தருவதாக பலரிடம் ஆயிஷா கூறி பணம் வசூலித்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து சரவணன் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கார்த்தியை, ஆயிஷாவிடம் அனுப்பி எம்எல்ஏ சீட் வாங்கி தரும்படி கேட்கவைத்துள்ளார். அவரிடம் ஆயிஷா எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்து கார்த்தி ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்தார்.

இதுபற்றி கார்த்தியும், சரவணனும் திவாகரனுக்கு தெரிவித்தனர். அவரது யோசனையின்படி மீதி பணத்தை திவாகரனின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் ஆயிஷாவிடம் தருவது என்று முடிவு செய்யப்பட்டது. உடனே திவாகரனின் வீடு முன்பு ஏதாவது பொய் சொல்லி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து ஆயிஷாவும், அவருடன் சிலரும் 3 காரில் நேற்று மாலை சுந்தரக்கோட்டை வந்தனர்.

சுந்தரக்கோட்டையில் உள்ள கல்லூரி அருகே திவாகரனின் ஆதரவாளர்கள், 3 காரையும் மடக்கி அதில் இருந்த ஆயிஷா, சென்னை வடபழனியை சேர்ந்த சேகர், பிரசாத்குமார் மற்றும் சவுந்தரராஜன் உள்ளிட்ட 8 பேரை பிடித்து மன்னார்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிமுகவில் சீட் வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+