டிரைவருடன் காரைக் கடத்தி ரூ.80 லட்சம் டாஸ்மாக் வசூல் பணம் கொள்ளை - சென்னையில் துணிகரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கார் ஒன்றை அதன் ஓட்டுநருடன் கடத்தி 80 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள 25 டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருமான வசூல் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று அந்த கடைகளில் வசூலித்த பணத்தை காரில் எடுத்து வரும்போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து பறித்துச் சென்றதாக அந்த நிறுவன ஊழியர்கள் 3 பேர் நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

80 lakhs theft from Chennai

நீலாங்கரையை அடுத்த அக்கரைபகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் வசூலுக்காக தாங்கள் சென்றபோது, காருக்குள் 80 லட்சம் ரூபாய் வசூல் பணத்துடன் இருந்த டிரைவரை மர்ம நபர்கள் தாக்கி மயக்கமடையச் செய்து விட்டு, காரை சிறிது தூரம் ஓட்டிச் சென்று பணத்தை கொள்ளையத்துச் சென்றுவிட்டதாக மற்ற இரண்டு ஊழியர்கள் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

காரில் இருந்த கைரேகையை பதிந்த போலீசார், பணம் வசூல் செய்யும் 3 ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நடந்த இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+