For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஒரே நாளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 82 பேர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் விடுமுறை நாளான சனிக்கிழமை இரவு 82க்கும் மேற்பட்டோர் குடி போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிபட்டுள்ளனர்.

சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரவு விடிய, விடிய போலீசார் வாகன சோதனை நடத்தி ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிடி ஆணை ரவுடிகளை மடக்கிப்பிடித்து கைது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

82 arrested for drunk and drive in Chennai

அந்த சோதனை வேட்டையில் சந்தேக நபர்களையும் பிடித்து விசாரிப்பார்கள். போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்கு போட்டு அபராதம் வசூலிப்பார்கள்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவும் இதுபோல் நடந்த வாகன சோதனையில் 576 சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். போதை ஆசாமிகள் 82 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்கள் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
82 persons arrested for drunk and drive in Chennai roads on Saturday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X