சென்னையில் ஒரே நாளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 82 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் விடுமுறை நாளான சனிக்கிழமை இரவு 82க்கும் மேற்பட்டோர் குடி போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிபட்டுள்ளனர்.
சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரவு விடிய, விடிய போலீசார் வாகன சோதனை நடத்தி ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிடி ஆணை ரவுடிகளை மடக்கிப்பிடித்து கைது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த சோதனை வேட்டையில் சந்தேக நபர்களையும் பிடித்து விசாரிப்பார்கள். போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்கு போட்டு அபராதம் வசூலிப்பார்கள்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவும் இதுபோல் நடந்த வாகன சோதனையில் 576 சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். போதை ஆசாமிகள் 82 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்கள் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications