845 கிலோ போதைப்பொருள் அழிப்பு ‘கடந்த ஆண்டை விட 10 மடங்கு அதிகம்’- சென்னை போலீஸ் கமிஷனர் சொன்ன தகவல்!
செங்கல்பட்டு : சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அதன் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில், காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் வகையில், தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல்காரர்களை கையும், களவுமாக போலீசார் பிடித்து வருகின்றனர்.

845 கிலோ கஞ்சா அழிப்பு
இந்நிலையில், சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில், சென்னை பெருநகர காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வழக்குகளில் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள்கள், நீதிமன்ற உத்தரவின்படி இங்கு அழிக்கப்பட்டது. மேலும், 700 கிலோ போதை பொருட்கள் நீதிமன்ற உத்தவுக்குப் பின் அழிக்கப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 592 வழக்குகளில் 908 பேர் கைது செய்யப்பட்டு 1,526 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகள் பறிமுதல்
அதுமட்டுமின்றி போதை மாத்திரைகள் தொடர்பான 24 வழக்குகளில், 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 42,000-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். இதுவரை 4.87 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, 2.88 கோடி ரூபாய் மதிப்புள்ள கெட்டமைன், 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த ஆண்டில் 350 பேரின் வங்கி கணக்கில் முடக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவதுடன், அவர்கள் வேறு வங்கி கணக்கு தொடங்குவதற்கு தடையாக அமையும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, வடக்கு மண்டல இணைய ஆணையர் ரம்யா பாரதி, மத்திய குற்றபிரிவு துணை ஆணையர் நாகஜோதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications