85 வயது மூதாட்டி கொலை.... நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா... ? வீடியோ
புதுவையில் 85 வயதான மூதாட்டியை நகைகளுக்காக கொள்ளையர்கள் கொலை செய்து, தூக்கில் மாட்டிச் சென்றுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை கொலை செய்து தூக்கிலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைகளுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டிபாளையம்பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி கிருஷ்ணவேணி. பிரான்சு நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவரை வீட்டில் கொலை செய்து கொள்ளையர்கள் அவரை புடவையில் தூக்கில் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக செய்யப்பட்ட கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களிருக்குமா என்ற வகையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுவையில் அதிக அளவிலான கொலை மற்றும் கொள்ளை நடக்கின்றன என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் புதுவை முதல்வர் நாரயணசாமி, ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இருந்தபோதும் அங்கு தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக நிறைய கொலைகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications