திருவள்ளூரில் பஸ் மோதி 8ம் வகுப்பு மாணவன் பலி: ஓட்டுநர் கைது
சென்னை: சென்னைக்கு அருகே அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து மோதி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்லைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் நெடுஞ்செழியன். இவர் இன்று காலை பள்ளி பேருந்தில் ஏறுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார்.
பள்ளிக்குச் செல்வதற்காக பள்ளி பேருந்தில் ஏறுவதற்காக வந்த மாணவர் மீது எதிரே வந்த பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே நெடுஞ்செழியன் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அப்பேருந்து ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலியான மாணவனின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவனின் உயிரிழப்பிற்கு சரியான பதில் அளிக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications