அமைச்சர் கருப்பணணை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை முயற்சி.. ஈரோட்டில் பரபரப்பு
அமைச்சர் கருப்பணணை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணணை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஓடைக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை மனு அளித்துள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனிடமும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவர் மனைவி பூங்கொடி தாயார் நாகம்மாள் மற்றும் தனது மகன்கள், மகள்கள் என 9 பேருடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது பஞ்சு ஆலை கழிவு பாதிப்பால் நாங்கள் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை எல்லோரிடமும் மனு கொடுத்து முறையிட்டு விட்டோம் எனக் கூறிய அவர்கள் 9 பேரும் தங்கள் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சுற்றுச் சுழல் பாதிப்புக்கு சுற்றுச்சூழல் அமைச்சரே துணையாக இருப்பதும் அமைச்சரை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications