அமைச்சர் கருப்பணணை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை முயற்சி.. ஈரோட்டில் பரபரப்பு
அமைச்சர் கருப்பணணை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணணை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஓடைக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை மனு அளித்துள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனிடமும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவர் மனைவி பூங்கொடி தாயார் நாகம்மாள் மற்றும் தனது மகன்கள், மகள்கள் என 9 பேருடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது பஞ்சு ஆலை கழிவு பாதிப்பால் நாங்கள் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை எல்லோரிடமும் மனு கொடுத்து முறையிட்டு விட்டோம் எனக் கூறிய அவர்கள் 9 பேரும் தங்கள் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சுற்றுச் சுழல் பாதிப்புக்கு சுற்றுச்சூழல் அமைச்சரே துணையாக இருப்பதும் அமைச்சரை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications