பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் - தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது
பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிய செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து சமஸ்கிருத கல்லூரி முன்பு காலை முதலே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த போலீசார், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்களையும் வரவழைத்திருந்தனர்.
இந்நிலையில், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்திற்கு 5 பன்றிக் குட்டிகளுடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர்.
அவற்றுக்கு பட்டையடித்து, பூணூல் அணிவித்ததுடன், அவற்றின் வாய்களை கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்து வந்தனர்.
பன்றிகளின் வாயை மூடி, சுற்றி கயிரால் இருக்கி கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்தனர் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.