சென்னையில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 32 வயது லோடு ஆட்டோ டிரைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 9 வயது சிறுமியை 32 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரத்தில் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். கூலித் தொழிலாளி. அவரது மனைவி ரோஜா. பழக்கடை வைத்து நடத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோஜா தனது அம்மா சகுந்தலாவை கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்துவிட்டார். பள்ளி விடுமுறை என்பதால் ரோஜாவின் 9 வயது மகள் பாட்டியுடன் கடைக்கு சென்றார்.

மதியம் 3 மணி அளவில் சுரஷே் என்ற லோடு ஆட்டோ டிரைவர் கடைக்கு வந்து சிறுமியிடம் பேசியுள்ளார். பொம்மை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி அவருடன் செல்லட்டுமா என்று பாட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி வியாபாரத்தில் பிசியாக இருந்ததால் கவனிக்கவில்லை.

இதனால் சிறுமி சுரேஷுடன் ஆட்டோவில் சென்றார். சுரேஷ் சிறுமியை செம்மன்சேரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டார். சாலையோரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் நடந்ததை விசாரித்து சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்று இரவே சுரேஷை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+