For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உருவாகிறது ஜெயலலிதாவின் 'ராஜ்யசபா" பேச்சுகள் அடங்கிய புத்தகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோது சபையில் அவர் பேசிய பேச்சுகள் புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் அவையில் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகின்றது.

A book on Jayalalithaa's speeches in Rajya sabha

மேலும், ஜெயலலிதா பேச்சில் உள்ள தமிழகம் சார்ந்த நலன்கள், தமிழ் மொழி மீது கொண்ட பற்று போன்றவைகளையும், சுவையான பேச்சுகளையும் அழகிய வடிவில், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தகமாக வெளியிட உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த புத்தகம் வெளிவர உள்ளதாம். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இந்த புத்தகம் வெளிவந்தால் ஜெயலலிதாவின் இமேஜ் மேலும் கூடிவிடும் என்பது அதிமுகவினர் எதிர்பார்ப்பு.

English summary
A book on the speeches delivered by CM Jayalaithaa in the Rajya Sabha while she was a MP will soon reach the stores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X