இர்மாவை போன்ற புயல் சென்னையை தாக்கும்... பீதியை கிளப்பும் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவை மிரட்டிய இர்மா போன்ற புயல் சென்னையையும் தாக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அமெரிக்காவை மிரட்டிய இர்மா போன்ற புயல் சென்னையையும் தாக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த வாரம் உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சூறையாடியது. புயலுடன் பெய்த கனமழையின் எதிரொலியாக மாநிலத்தின் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில் இர்மா புயல் மற்றும் மழை, வெள்ளத்துக்கு 80க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இர்மா புயல் புரட்டிப்போட்ட ஃபுளோரிடா மாகாணத்தில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை.

இர்மா போன்ற புயல்
இந்த இர்மா புயலைப் போன்ற ஒரு புயல் சென்னையை தாக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நில பயன்பாட்டு ஆராய்ச்சி மையம், இந்திய - ஜெர்மன் சஸ்டைனபிலிட்டி மையம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

கடல்நீர்மட்டம் உயர்வு
அதில் அடுத்த 30 ஆண்டுகளில் சென்னை கடல்நீர் மட்டம் 4.35 மீட்டர் முதல் 6.85 மீட்டர் வரை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் சூறாவளி, புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன்மூலம் 1963 கிலோ மீட்டர் நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

கடலோர பாதுகாப்பு திட்டங்கள்
கடல்நீர் மட்டம் உயர்வதற்கு ஏற்றதுபோல் கடலோர பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தாவிட்டால் தமிழகம் மிகப்பெரிய சேதத்தை எதிர்க்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கட்டுப்பாடு மண்டலங்களில் மேலாண்மை பணிகளை மேற்கொள்வது தற்போது முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஒருங்கிணைந்த கடலோர பகுதி மேலாண்மை திட்டத்தை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வீசிய வர்தா புயலின் போது சென்னை பெரும் சேதத்தை சந்தித்தது.

3 மீட்டர் வரை உயர்வு
இதைத்தொடர்ந்து கடல்நீர் மட்டம் ஒன்று முதல் 3 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. கடல்நீர்மட்டம் உயர்வதால் சென்னை இர்மா புயலை போன்ற ஒரு புயலை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications