தூத்துக்குடி அருகே காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை!
தூத்துக்குடி அருகே காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துத்துக்குடியைச் சேர்ந்தவர் டேய்சிங் அமிர்த ராஜ். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மூன்று சென்ட் பகுதியில் டேய்சிங் அமிர்தராஜ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டேய்சிங் அமிர்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் டேய்சிங்கின் காதலியின் உறவினரான சக்ரவர்த்தி உள்ளிட்ட மூன்ற பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications