வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை இழுத்து வந்து வெட்டிக் கொன்ற கும்பல்... சென்னையில் பயங்கரம்
சென்னையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்து வந்த மர்மநபர்கள் அவரை தெருவில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
சென்னை: மேடவாக்கத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்து வந்த மர்மநபர்கள் அவரை தெருவில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். படுகாயங்களுடன் தப்பிய அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன், ராயப்பேட்டையில் உள்ள தனியார் தியேட்டர் மாலில் எலக்ட்ரிக்கல் பிரிவு இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுரேகா என்ற மனைவியும் சாதனா என்ற 4வயது மகளும் உள்ளனர்.

நேற்றிரவு இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம்கேட்டு அவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே புகுந்த மர்மநபர்கள் 4 பேர் கணவன் மனைவி இருவரையும் மதுபாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர். பெற்றோரின் சத்தம் கேட்டு எழுந்த மகள் சாதனா நடப்பதைக் கண்டு பயந்து பீரேவின் பின்புறம் பதுங்கிக்கொண்டாள்.
இதையடுத்து மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரின் கழுத்தையும் அறுத்தனர். இதில் சுரேகா ரத்தவெள்ளத்தில் சரிந்து மயக்கமானார். பின்னர் அறிவழகனை வீட்டிலிருந்து தரதரவென இழுத்துச் சென்ற அந்தகும்பல் வீட்டின் வெளியே வைத்து அவரை ஆத்திரம் தீர கத்தியால் குத்தினர்.
இதில் அறிவழகன் அங்கேயே உயிரிழந்தார். இன்று காலை இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சுரேகாவின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சுரேகாவின் தாய் பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தார். மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுரேகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முன்விரோதம் காரணமாக அறிவழகன் கொல்லப்பட்டரா அல்லது கள்ளக்காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications