வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை இழுத்து வந்து வெட்டிக் கொன்ற கும்பல்... சென்னையில் பயங்கரம்
சென்னையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்து வந்த மர்மநபர்கள் அவரை தெருவில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
சென்னை: மேடவாக்கத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்து வந்த மர்மநபர்கள் அவரை தெருவில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். படுகாயங்களுடன் தப்பிய அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன், ராயப்பேட்டையில் உள்ள தனியார் தியேட்டர் மாலில் எலக்ட்ரிக்கல் பிரிவு இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுரேகா என்ற மனைவியும் சாதனா என்ற 4வயது மகளும் உள்ளனர்.

நேற்றிரவு இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம்கேட்டு அவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே புகுந்த மர்மநபர்கள் 4 பேர் கணவன் மனைவி இருவரையும் மதுபாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர். பெற்றோரின் சத்தம் கேட்டு எழுந்த மகள் சாதனா நடப்பதைக் கண்டு பயந்து பீரேவின் பின்புறம் பதுங்கிக்கொண்டாள்.
இதையடுத்து மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரின் கழுத்தையும் அறுத்தனர். இதில் சுரேகா ரத்தவெள்ளத்தில் சரிந்து மயக்கமானார். பின்னர் அறிவழகனை வீட்டிலிருந்து தரதரவென இழுத்துச் சென்ற அந்தகும்பல் வீட்டின் வெளியே வைத்து அவரை ஆத்திரம் தீர கத்தியால் குத்தினர்.
இதில் அறிவழகன் அங்கேயே உயிரிழந்தார். இன்று காலை இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சுரேகாவின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சுரேகாவின் தாய் பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தார். மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுரேகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முன்விரோதம் காரணமாக அறிவழகன் கொல்லப்பட்டரா அல்லது கள்ளக்காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications