ராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகள்.. கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது!
ராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம்: ராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்ன ரெட்டையூரணி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 65 வயதான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 30 வயதான 3வது மகள் ஞானசவுந்தரிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை செந்தில் குமார் கண்டித்தும் கேட்காமல் ஞானசவுந்தரி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
இதனை பார்த்த செந்தில்குமார், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்ததில் ஞானசவுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
செல்போனில் பேசியதற்காக மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications