தூக்கத்தில் எழுந்து அம்மாவை தேடிய 4வயது பெண் குழந்தை.. 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து பலி
சென்னை சூளைமேட்டில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சூளைமேட்டில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூ என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தி 7-வது தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோபால் தனது மனைவி கீதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தங்கியுள்ளார்.

பால்கனி
குடியிருப்பின் பிற வீடுகளின் பால்கனிகளில் முறையான தடுப்புக் கம்பிகள் உள்ள நிலையில் இது அலுவலகம் என்பதால் முறையான தடுப்புக் கம்பிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

அம்மாவை தேடிய குழந்தை
இந்நிலையில் நேற்று இரவு கீதா 4 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தையுடன் கீழ் தளத்துக்கு வந்துள்ளார். அப்போது கண்விழித்த 4 வயது குழந்தை சாரதா அம்மாவை தேடியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
அம்மாவை தேடி பால்கனி பகுதிக்குச் சென்ற சாரதா அங்கிருந்து எட்டிப்பார்த்தபோது திடீரென தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தை பலி
ஆனால் குழந்தை சாரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications