எத்தனை நாள் ஆசையோ? இந்த பாட்டிக்கு எவ்வளவு தைரியம் பாருங்க மக்களே..!
மூதாட்டி ஒருவர் நின்றபடி படு ஸ்பீடாக ஊஞ்சலில் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: மூதாட்டி ஒருவர் நின்றபடி படு ஸ்பீடாக ஊஞ்சலில் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஊஞ்சல் ஆடுவதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இன்றைக்கும் கூட பார்க்குகளில் சிறு குழந்தைகளுக்கான ஊஞ்சல்களில் பெரியவர்கள் சிலர் ஆடுவதை காண முடியும்.
ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. குதூகலமூட்டும் ஊஞ்சல் ஆட்டத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆடி மகிழ்கின்றனர்.

ஊஞ்சலாடும் பாட்டி
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குக்கூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் ஊஞ்சல் சேவை கூட நடத்தப்படுகிறது. இந்நிலையில் பாட்டி ஒருவர் உயரமான மரத்தில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
|
நின்றபடி ஸ்பீடாக
உயரமான மரத்தில் கட்டப்பட்டுள்ள அந்த ஊஞ்சலில் நின்றபடியே அந்த பாட்டி படு ஸ்பீடாக கொஞ்சமும் பயமின்றி சிரித்தபடியே ஆடுகிறார்.

எவ்வளவு தைரியம்
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதனை பார்ப்பவர்கள் இந்த பாட்டிக்கு எவ்வளவு தைரியம் என்றும் அவரது இந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வைரல் வீடியோ
இந்த வீடியோ எங்கு எடுத்தது, அந்த பாட்டி யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும் அந்த வீடியோ படு பயங்கரமாக வைரலாகியுள்ளது.
பாட்டியின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் இந்த ஊஞ்சாலட்டத்திற்கு ஏன் இப்படி ஒரு பாட்டை பின்னணியாகப் போட்டார்கள் என்று தெரியவில்லை. அது மட்டும்தான் உறுத்தலா இருக்கு.












Click it and Unblock the Notifications