"பரணி"என்ற நேர்மையானஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான்.. சொல்கிறார் எஸ்வி சேகர்!
நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் நேற்று வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் நேற்று வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அவர் பைத்தியக்காரர் என்றும் பிக்பாஸ் குடும்பத்தினர் குற்றம்சாட்டி அவரை ஒதுக்கி வைத்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பரணி நேற்று சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார்.

இதையடுத்து விதிகளை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சர் தாங்காமல்தான் அவர் வெளியே செல்ல விரும்பினார் என்பது பார்த்த பொதுமக்கள் அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.
பரணி வெளியேறுவதற்கு பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரே காரணம் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் பரணி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
BIG BOSS "பரணி"என்ற நேர்மையானஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான். God Bless.
— S.VE.SHEKHER (@SVESHEKHER) July 10, 2017
அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் "பரணி"என்ற நேர்மையான ஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான். அவருக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications