Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடப்பாவி.. கள்ளக்காதலியை மனைவியாக்க இந்த கணவன் குடும்பத்துடன் செய்த செயலை பாருங்க..!

நாகை அருகே கள்ளக்காதலியை மனைவியாக்க திட்டமிட்ட கணவன் மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலிமருந்து ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகை: மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலியை மனைவியாக்க திட்டமிட்ட கணவன் மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலிமருந்து ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொலைகள் பெரும்பாலும் ஒருவருக்கு தெரியாமல் மறைமுகமாகவே நடைபெறும்.

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் உண்மைகள் வெளிப்படும். இந்நிலையில் நாகை அருகே கள்ளக்காதலியை திருமணம் செய்யப்போகிறேன் என கூறி கணவன் கட்டிய மனைவியின் வாயில் எலிமருந்தை ஊற்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் திருஞானசம்பந்தம். 32 வயதான இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த வினோதா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

கணவனின் கள்ளக்காதல்

கணவனின் கள்ளக்காதல்

கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் திருஞானசம்பந்தத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அடித்து துன்புறுத்திய கணவன்

அடித்து துன்புறுத்திய கணவன்

கணவனின் கள்ள தொடர்பு குறித்து மனைவி வினோதா அவரிடம் கேட்டுள்ளார். அதெல்லாம் நீ கேட்கக்கூடாது என்று அதட்டிய கணவன், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கு திருஞான சம்பந்தத்தின் குடும்பத்தினரும் சப்போர்ட் செய்துள்ளனர்.

உடைந்து போன வினோதா

உடைந்து போன வினோதா

திருஞானசம்பந்தம் கள்ளக்காதலி வீட்டிலேயே கிடையாய் கிடக்க கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் திருஞானசம்பந்தம், தனது கள்ளக்காதலியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியதால் உடைந்து போனார் வினோதா.

கொலை செய்ய திட்டம்

கொலை செய்ய திட்டம்

நான் இருக்கும் வரை அது நடக்காது என்ற அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் இனிமேலும் இவளை விட்டுவைத்தால் தன் நிம்மதி பறிபோகும் என்று எண்ணி அவரை கொல்ல திட்டமிட்டார்.

வாயில் எலி மருந்தை ஊற்றி

வாயில் எலி மருந்தை ஊற்றி

இதைத்தொடர்ந்து திருஞானசம்பந்தமும் அவரது குடும்பத்தினரும் வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்றனர். இதனால் உயிரைக் காத்துக்கொள்ள அலறினார் வினோதா.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கு திரண்டனர் அக்கம்பக்கத்தினர். இதைத்தொடர்ந்து அந்த கொலைக்கார கும்பலிடம் இருந்து வினோதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வினோதா அளித்த புகாரின் பேரில் திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

கள்ளக் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக கட்டிய மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றி கணவன் மற்றும் குடும்பத்தார் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+