நெற்றியை துளைத்த சாவியுடன் மருத்துவமனை வந்த இளைஞர்... போதை நபருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
சேலம்: நெற்றியை துளைத்து ஊடுருவிய சாவியுடன் மருத்துவமனைக்கு ஒருவர் அழைத்து வரப்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த முருகன் நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான தியாகராஜன். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, கெங்கவல்லி பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு, தியாகராஜன் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக அன்றிரவு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

ஏற்காடு செல்லும் பேருந்துக்காக காத்திருந்த போது, குழந்தைகள் இருவரும் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் அங்குள்ள நடைபாதை ஓரமாக குழந்தைகளை தூங்க வைத்துள்ளார். இரவு 10 மணியளவில், ஏற்காடு பேருந்து வந்ததால் சீட் பிடிப்பதற்காக குழந்தைகளை மனைவியிடம் விட்டு சென்றுள்ளார்.
அப்போது குடிபோதையில் அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தூங்கி கொண்டிருந்த குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கவியரசி சத்தம் போட்டதால், அவரிடமும் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார். இதை தியாகராஜன் வந்து தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த போதை இளைஞர், தனது கையில் வைத்திருந்த கார் சாவியை எடுத்து தியாகராஜனின் நெற்றியில் வேகமாக குத்தினார். இதில் அந்த சாவி 2 அங்குலத்திற்கு தியாகராஜனின் நெற்றிக்குள் துளைத்துச் சென்றது.
இதனால் வலியால் மயங்கி கீழே விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நெற்றியில் துளைத்த சாவியுடன் இளைஞர் அழைத்து வரப்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அறுவை சிகிச்சை மூலம் நெற்றியில் இருந்து சாவி அகற்றப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பள்ளப்பட்டி போலீசார் 32 வயதான அருண் என்பவரை கைது செய்தனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications