பகலில் பணி... இரவில் ஜல்லிக்கட்டு போராட்டம்... அசத்தும் தேனி காவலர் !!
தேனியை சேர்ந்த காவலர் ஒருவர் பகலில் பணியையும் இரவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டு அசத்தி வருகிறார். அவருக்கு இணையதளம் வாயிலாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பகலில் தனது போலீஸ் பணியையும் இரவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். காவலரின் இந்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவன். இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
பகல் நேரத்தை பணிக்காக செலவிடும் புவன் இரவு நேரத்தை தனது உரிமையை காக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.
பணி நேரத்தில் காக்கிச்சட்டையில் மிடுக்காக இருக்கும் புவன் இரவு நேரத்தில் கலர் உடையில் பாரம்பரிய வீர விளையாட்டுக்காக போராடி வருகிறார். அவரது புகைப்படம் தற்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வலம் வருகிறது. அதனை ஏராளமானோர் பகிர்வதோடு காவலர் புவனுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications