+2 மாணவிக்கு 17 இடங்களில் கத்தி குத்து... கொலைவெறி இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

மானாமதுரை : 12 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து அவரது உடலில் 17 இடங்களில் கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிப்பவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சோமாத்தூரைச் சேர்ந்த இவர் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

A man stabbed school girl in manamadurai sivagangai district

காந்தி சிலை அருகே மாணவி வந்த போது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாணவியின் உடலில் 17 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.
இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள், கொலை வெறி இளைஞரை பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, அவரது பெயர் சந்திரசேகரன் என தெரிய வந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். படுகாயம் அடைந்த மாணவி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+