For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவருடன் தகராறு.. சென்னை தாம்பரம் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

சென்னை தாம்பரம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பெண் சிரக்ஷா. சென்னை தாம்பரம் அருகே கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

A mother killed her two daughters and commit suicide

இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிரக்ஷா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

தான் இறந்துவிட்டால் பெண் குழந்தைகள் கஷ்டப்படும் என்று நினைத்த அவர் முதலில் தனது 5 வயது மகள் ஷ்ரேயா மற்றும் 5 மாத குழந்தை ஜிகானாவை கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப்பெண்ணின் கணவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A mother killed her two daughters and commit suicide. In a family problem she commit suicide with her children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X