தொடரும் அரசு கட்டிட விபத்துகள்.. கனமழையால் நாகையில் தீயணைப்பு கட்டிடம் இடிந்தது!
நாகையில் விடிய விடிய பெய்த கனமழையால் தீயணைப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
நாகை: நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் தீயணைப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த கட்டிடம் மிகவும் புராதனமான பழைய கட்டிடம் ஆகும். இது 1943ல் கட்டப்பட்ட கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் மிகவும் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாகையிலும் மிகவும் அதிக அளவில் மழை பெய்தது. நேற்று இரவு ஆரம்பித்த மழை விடாமல் இரவு முழுக்க பெய்தது. இந்த கொடூரமான மழை காரணமாக நிறைய பகுதிகள் பாதிப்பு அடைந்தது.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் பல இதன் காரணமாக சிறிய அளவில் சேதம் அடைந்தது . சில இடங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் தீயணைப்பு கட்டிடம் ஒன்று நேற்று பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழைமையான புராதான கட்டிடம் ஆகும். இது ஆங்கிலேயர் காலத்தில் 1943ல் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏதும் உயிரிழப்புகள் நேர்ந்து இருக்கிறதா என்பது தெரியவில்லை. நாகையில் அரசுக்கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அங்கு அரசு போக்குவரத்து பணிமனையின் ஓய்வறை ஒன்று இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications