ஆளப் போறான் தமிழன் என்பதை விஜய் ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும்: மெர்சல் விழாவில் ஏஆர் ரகுமான்
ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மெர்சல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.
Recommended Video

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, "25 ஆண்டுகளான தனது திரைவாழ்க்கையில், இப்போதுள்ள ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் தனக்கு வயது குறைந்து" என ரகுமான் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகியுள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தொகுப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ரகுமான், ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறிய ரகுமான், பெண்களை அன்பாகப் பார்க்க வேண்டும் என்றும் அவர்களை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications