திருப்பூரில் மாணவர் மரணம்... தனியார் மருத்துமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் - வீடியோ
மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாணவர் மரணமடைந்தார் எனக் கூறி, உறவினர்கள் அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு உண்டானது.
திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் மூலம் மாணவர் இறந்ததாகக் கூறி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் சந்தோஷ் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்தான். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து சந்தோஷை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர், நரம்பு ஊசி போட்டுள்ளார். சிறுது நேரம் கழித்து சந்தோஷ் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மூர்ச்சையாகி சந்தோஷ் மரணம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையே சந்தோஷ் மரணத்துக்குக் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications