ஜெ.வுக்கு இரங்கல் தெரிவிக்க... 28ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 28ஆம் தேதி கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்து.
சென்னை: தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தை 28ஆம் தேதி கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்புக் கூட்டம் வரும் 28ஆம் தேதி கூட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அறவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் மட்டும் பேசுவதா, அல்லது அவை முன்னவர் மூலம் தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் பேச வைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிகிறது. மேலும் இந்த சிறப்புக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மற்றும் மறைந்த முன்னாள் எம்எம்ல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications