கோவையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி... பதட்டம்
கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை வஊசி மைதானத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நீரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள போராட்டக் களங்களில் அதிரடியாக குவிந்த போலீசார் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். கோவை வஊசி மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்களை போலீசார் போராட்டத்தை கைவிட்டு கலைந்துபோக கூறினர்.
இதற்கு மாணவர்கள் உடன்படாதால் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் போராட்டக்களத்திலேயே தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போலீசார் நடத்திய தடியடியால் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சக போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications