மயிலாப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் திடீர் பள்ளம்.. மக்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அதிர்சியடைந்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி அமைந்துள்ள பி.எஸ்.சிவசாமி சாலை அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. ஒரு வழி பாதையான இந்த சாலையில் பேருந்துகள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. லஸ், அடையாறு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான இதில் காலை 11 மணி அளவில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் மண்ணைக் கொட்டி பள்ளத்தை நிரப்பிய போதும் குழி சரியாக மூடப்படவில்லை.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தரமற்ற சாலைகளே இது போன்ற பள்ளங்கள் ஏற்பட காரணம் என்று கூறிய பொதுமக்கள், இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+