கொலுசு கடை ஓரத்திலே.. வட்டாட்சியர் போட்ட செம குத்து.. ஆரவாரம் செய்த ஊழியர்கள்.. தீயாய் பரவும் வீடியோ
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் குத்தாட்டம் போட்டு வரவேற்ற காட்சிகள் வைரலாகியுள்ளன.
Recommended Video
சென்னையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதை பிரதமர் நரேந்கிர மோடி ஜூன் 19 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த ஜோதி ஓட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நேற்றைய தினம் தமிழகத்தை வந்தடைந்தது.

75 நகரங்கள்
இந்த ஜோதியை ஏந்தி வீரர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். 40 நாட்களில் இந்தியாவின் 75 நகரங்களில் இந்த செஸல் ஒலிம்பியாட் ஜோதி வலம் வந்தது. இதையடுத்து நேறஅறைய தினம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் வரவேற்றார்.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இந்த ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் வருவாய்த் துறையினர் சக அலுவலர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆரவாரத்துடன் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார்.

கைதட்டி ஆரவாரம்
இந்த ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியின் போது செஸ் போர்டு போல் தரையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டிக்கர் மீது வட்டாட்சியர் நடனம் ஆடினார். அவர் கொலுசு கடை ஓரத்திலே எனும் பாடலுக்கு அவர் நடனம் ஆடினார். அங்கிருந்த குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வட்டாட்சியருடன் பணியாற்றும் சில ஊழியர்களும் அந்த நடனத்தில் கலந்து கொண்டனர்.

ஒலிம்பியாட் ஜோதி
இந்த ஒலிம்பியாட் ஜோதி இன்றைய தினம் மாமல்லபுரத்தை வந்தடைந்தது. இந்த ஜோதியை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்க இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். அவர் அந்த ஜோதியை ஏந்தி விழா நடைபெறும் இடத்தை வலம் வந்தார். இன்று மாலை இந்த ஜோதி சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை துவக்க விழா நிகழ்ச்சியிலும் இந்த ஜோதி இடம்பெறுகிறது.












Click it and Unblock the Notifications