சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து.. பெண் ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த புலிப்பாறைப்பட்டியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

A woman dead in the fire accident in the crackers factory

இந்நிலையில் இந்த ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பரமேஸ்வரி என்ற பெண் உயிரிழந்தார்.

நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+