For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து.. பெண் ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த புலிப்பாறைப்பட்டியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

A woman dead in the fire accident in the crackers factory

இந்நிலையில் இந்த ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பரமேஸ்வரி என்ற பெண் உயிரிழந்தார்.

நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A woman dead in the fire accident in the crackers factory near in Sivakasi. 4 others injured have been admitted in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X