பெரியப்பா செய்யும் செயலா இது.. கல்பாக்கத்தில் காமவெறி அண்ணனை குத்திக் கொன்ற தம்பி

காஞ்சிபுரம் அருகே மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அண்ணனை தம்பி சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அண்ணனை தம்பி சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹரிகரன். சென்டரிங் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஹரிஹரனுக்கு திருமால் என்ற அண்ணன் உள்ளார். திருமால் மனைவியை பிரிந்து மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.

தகாத முறையில் நடந்த அண்ணன்

தகாத முறையில் நடந்த அண்ணன்

கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டில் ஹரிகரனின் மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த பெரியப்பாவான திருமால், மகள் என்றும் பாராமல் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமாலை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மன உளைச்சலில் தம்பி

மன உளைச்சலில் தம்பி

மகளிடம் உடன் பிறந்த அண்ணனே தகாத முறையில் நடந்ததை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஹரன், வீட்டை காலிசெய்துவிட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று விட்டார்.

கொலை செய்ய திட்டம்

கொலை செய்ய திட்டம்

ஆனாலும் அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த ஹரிஹரன் திருமாலை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கான நேரம் எப்போது வரும் என காத்திருந்தார் ஹரிஹரன்.

குத்தி கொலை

குத்தி கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமால் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஹரிஹரன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+