For Daily Alerts
Just In
மகாத்மா அப்துல் கலாம் ! - ரஜினிகாந்த் புகழஞ்சலி
அப்துல் கலாம் ஒரு மகாத்மா, அவர் காலத்தில் வாழ்ந்தது ஆசீர்வாதம், என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
டாக்டர் அப்துல் கலாம் மரணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல்:
மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியார் அவர்களை எல்லாம் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் மகாத்மா கலாமுடன் வாழ்ந்த ஆசீர்வாதம் கிடைத்தது.
எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிகரம் தொட்டவர். பல கோடி மக்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.
கோடான கோடி மாணவர்கள் உள்ளங்களில் குடி கொண்டவர். அவர்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்.
நம்மைப் போலவே கடவுளுக்கும் கலாம் மீது அன்பு அதிகம். அதனால்தான் தன்னிடம் அழைத்துக் கொண்டார்.
இவ்வாறு ட்விட்டரில் ரஜினி கூறியுள்ளார்.
Comments
English summary
Actor Rajinikanth hailed Dr Abdul Kalam as Mahatma.