காவிரி விவகாரம்: கவிக்கோ அப்துல்ரகுமானின் "இந்தியா ஒரே நாடா?" ஆவேச கவிதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு நீர் திறக்கக் கூடாது என கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெறுவது குறித்து கவிக்கோ அப்துல்ராகுமான் கொந்தளித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் இன்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Abdul Rahman's poem on Cauvery Water Dispute

கவிக்கோ அப்துல்ரகுமான் சற்றுமுன் அழைத்து, காவிரி விகாரம் பற்றி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்தார்.

கூடவே அது குறித்தான ஒரு கவிதையையும் சொன்னார். அதை இங்கே பகிர்கிறேன்.

இந்தியா ஒரே நாடா?

-கவிக்கோ அப்துல்ரகுமான்

Abdul Rahman's poem on Cauvery Water Dispute

ரத்தம்
எனக்கு மட்டும்தான்
சொந்தம் என்று
இதயம் சொன்னால்
உடல் என்ன ஆகும்?

திருமணமான பிறகும்
பெண்
பிறந்தகத்தில்தான்
இருக்கவேண்டும்
என்று சொன்னால்
கணவன் கதி என்ன?

எனக்கொரு சந்தேகம்
கர்நாடகம்
இந்தியாவில்தான் இருக்கிறதா?

தமிழ்நாடும்
இந்தியாவில்தான் இருக்கிறதா?

இந்தியா என்பது
ஒரே நாடுதானா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+