"என் குழந்தைகளை நானே கொன்று விட்டேனே, காமம் என் கண்ணை மறைத்து விட்டதே" போலீஸிடம் புலம்பிய அபிராமி
Recommended Video

சென்னை: "என் குழந்தைகளை நானே கொன்று விட்டேனே, அந்த அளவுக்கு காமம் என் கண்ணை மறைத்துவிட்டதே" என்று போலீஸாரிடம் அழுது புலம்பியுள்ளார் அபிராமி.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவருக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இரு மாதங்கள் என்றாலும் அந்த கள்ளக்காதலை விட அபிராமிக்கு மனமில்லை. இதனால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார்.
இதனிடையே கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் பிடித்தனர். இதையடுத்து நாகர்கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்ற போலீஸார் அவரை வைத்தே அபிராமியை பிடித்தனர்.
போலீசார் அபிராமியை கைது செய்த போது "தெரியாமல் தவறு செய்து விட்டேன். என் குழந்தைகளை நானே கொன்று விட்டேனே, காமம் என் கண்ணை மறைத்து விட்டதே" என்று அழுது புலம்பினார்.
இரு உயிர்கள் போய் விட்டது . குடும்பத்தினரின் மானமும் கப்பலேறி விட்டது. இப்ப அழுது என்ன புண்ணியம்.












Click it and Unblock the Notifications