"எல்லா நைட்டும் எனக்காக யார் இருக்கா"... டப்ஸ்மாஷிலும் சுந்தரத்தை விடாத அபிராமி!
Recommended Video
சென்னை: குன்றத்தூர் அபிராமியும் கள்ளக்காதலன் சுந்தரமும் கொஞ்சி பேசும் டப்ஸ்மாஷ் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து மோகத்தின் காரணமாக தனது இரு குழந்தைகளையும் அபிராமி கொன்றுவிட்டார்.
இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற நிலையில் அவர் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் எங்கு பார்த்தாலும் அபிராமி புராணம் பாடப்படும் நிலையில் அவரும் சுந்தரமும் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இதெல்லாம் யோசித்து பார்த்தாலே நைட் தூக்கம் வருமா என தெரியவில்லை என்கிறார் சுந்தரம். அதற்கு அபிராமியோ ஆனால் இன்னிக்கு நான் நல்லா தூங்குவேன். எல்லா நைட்டும் எனக்காக யார் இருக்கானு யோசித்தாலே பாதி நைட் போய்விடும். இப்ப புருஷன் நீ இருக்க... என்று முழுக்க ரொமான்ஸ் மூடில் போகிறது அந்த வீடியோ.