தொழில்நுட்பக் கோளாறு... 117 பயணிகளுடன் அபுதாபி புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
சென்னை: 117 பயணிகளுடன் அபுதாபி புறப்பட்ட விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இன்று காலை சென்னையிலிருந்து அபுதாபி செல்ல எதிஹாட் விமானம் ஒன்று 117 பயணிகளுடன் தயாரானது. விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழும்பத் தொடங்கிய போது விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
உடனடியாக இது தொடர்பாக விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த விமானி, பத்திரமாக விமானத்தை சென்னை விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்கினார்.
பின்னர், விமானத்திலிருந்து பயணிகள் வெளியேற்றபப்ட்டனர். அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதிகள் விமான நிலைய அதிகாரிகளால் ஏற்பாடு செய்யபப்பட்டது.
சமீபகாலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.