கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதற்கு ஏசி கேஸ் கசிவு காரணம் இல்லையாம்!
கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம் ஏசியில் இருந்து வெளியேறிய வாயு இல்லை என தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், ஏசியில் இருந்து வெளியேறிய வாயு இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு மேட்டுகுப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சரவணன், கலையரசி அவர்களது மகன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வீட்டினுள் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்து கிடந்தனர்.
இவர்களது உயிரிழப்பிற்கு ஏசி எந்திரத்திலிருந்து வெளியேறிய வாயு தான் காரணம் என கூறப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதி மட்டும் இல்லாமல் ஏசி எந்திரம் பயன்படுத்தும் அனைவரிடத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.

ஏசி பழுதுப்பார்ப்போர் விளக்கம்
இந்நிலையில் மூவர் உயிரிழப்பிற்கும் ஏசி வாயுவிற்கும் எந்த தொடர்பும் இல்லையென தென்னிந்திய குளிர்சாதன பழுதுபார்ப்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.

மின்மாற்றியை மாற்றவில்லை
இதுகுறித்து சென்னை அண்ணாநகர் அருகே செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில பொது செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் விபத்துக்கான காரணம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பொழுது ஜெனரேட்டரை பயன்படுத்தியதாலும், மின் மாற்றியை மாற்றாமல் நேரடியாக பயன்படுத்தியதே என தெரிவித்துள்ளனர்.

கார்பன் மோனாக்ஸைடு
அதேபோல் படுக்கை அறையின் உள்ளே வைத்து ஜெனரேட்டரை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு அறையில் முழுவதும் பரவியதால் மூவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அச்சப்பட வேண்டாம்
உயிரிழப்பிற்கும் ஏசி எந்திரத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. இதனால் ஏசி எந்திரத்தை பயன்படுத்த அச்சப்பட தேவையில்லை என தென்னிந்திய ஏசி பழுது பார்ப்போர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications