For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை - ஹவுரா இடையே ஏசி தட்கல் சிறப்பு ரயில் நாளை மறுநாள் இயக்கம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இரு மார்க்கங்களிலும் முழுவதும் ஏசி பெட்டிகளை கொண்ட தட்கல் அதி விரைவு சிறப்பு ரயில் ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

விடுமுறை காலத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தட்கல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது.

AC superfast tatkal special trains between Howrah – Chennai Central

இதன்படி ஹவுரா - சென்னை இடையே முழுவதும் ஏசி பெட்டிகளைக்கொண்ட தட்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 15ந் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு ஹவுராவில் இருந்து தட்கல் சிறப்பு ரயில் புறப்படும்.

இதேபோல 16ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுராவிற்கு மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.

இந்த ரயிலில் இரண்டடுக்கு, ஏசி பெட்டிகள் இரண்டு; மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் எட்டு இருக்கும். இந்த ரயிலில் தட்கல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

English summary
Train No.02843 Howrah – Chennai Central AC superfast tatkal special train will leave Howrah at 12.40 hrs. o­n 15.06.2015 and reach Chennai Central at 14.50 hrs. the next day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X