சென்னை - ஹவுரா இடையே ஏசி தட்கல் சிறப்பு ரயில் நாளை மறுநாள் இயக்கம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இரு மார்க்கங்களிலும் முழுவதும் ஏசி பெட்டிகளை கொண்ட தட்கல் அதி விரைவு சிறப்பு ரயில் ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
விடுமுறை காலத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தட்கல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது.

இதன்படி ஹவுரா - சென்னை இடையே முழுவதும் ஏசி பெட்டிகளைக்கொண்ட தட்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 15ந் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு ஹவுராவில் இருந்து தட்கல் சிறப்பு ரயில் புறப்படும்.
இதேபோல 16ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுராவிற்கு மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.
இந்த ரயிலில் இரண்டடுக்கு, ஏசி பெட்டிகள் இரண்டு; மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் எட்டு இருக்கும். இந்த ரயிலில் தட்கல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications