Breaking News: டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்- மக்கள் அலறியடித்து வீதிகள் குவிந்தனர்!
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் புற நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோல, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேசான நில நடுக்கம்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சேத மதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. ஆப்கனை மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 6 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பேஜில் இணைந்திருக்கவும்.