தஞ்சை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இன்று நாளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 8 பேர் பலி!
தஞ்சை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இன்று நாளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சென்னை: தஞ்சை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இன்று நாளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் ஏற்படும் மரணங்களும் உயர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மன் பேட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் கார்த்தி, விஜயகுமார் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டம், சித்தாளந்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த கோர விபத்தில் திருச்செங்கோடு தலைமை காவலர் செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்துகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications