Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருப்புக்கோட்டை: பள்ளி மாணவன் பாஸ்கரனை கொன்ற 'ஓரினச்சேரிக்கை' கொலையாளி கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: அருப்புக்கோட்டை அருகே பள்ளி மாணவனை வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு தப்பி ஓடிய கொலையாளி மாரீஸ்வரனை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எல்லையோர கிராமமான அயன்கரிசல்குளம் அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல்குடி அருகேயுள்ளது. இந்த ஊரை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரின் மகன் பாஸ்கரன். இவர் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்தார்.

அதே அயன்கரிசல்குளத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி செல்வம் என்வரது மகன் மாரீஸ்வரன் (வயது 18). அதே பள்ளியில் பிளஸ் ஒன் படித்த மாரீஸ்வரன், பெயிலானதால், படிப்பை நிறுத்திவிட்டார். இவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உண்டு எனக் கூறப்படுகிறது.

மாரீஸ்வரன் அடிக்கடி பாஸ்கரனை ஹோமோ செக்ஸ்க்கு அழைத்து தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு மறுத்த பாஸ்கரன் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரனின் தந்தை கோபால் இது தொடர்பாக மாரீஸ்வரனின் பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் போலீஸிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாஸ்கரன் மீது மாரீஸ்வரன் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த பாஸ்கரன், தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார். ஆசிரியர்கள் 8.30 மணிக்குத்தான் வருவார்கள் என்பதால் பாஸ்கரனும் சில மாணவர்களும் வகுப்பறையில் தனியாக உட்கார்ந்திருந்தனர்.

அப்போது பள்ளி வகுப்பறையில் நுழைந்த மாரீஸ்வரன் நேரடியாக பாஸ்கரனிடம் சென்று தகராறு செய்தார். பிறகு மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியால் பாஸ்கரனின் நெஞ்சம் மற்றும் முகத்தில் பலமாக குத்தினார்.மேலும் இறுதியாக பாஸ்கரனின் தலையில் கத்தியால் பலமாக குத்தினார்.

பாஸ்கரனின் அலறல் சத்தம் கேட்ட மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையவும், தலையில் குத்திய கத்தியை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் கத்தி கைக்கு வரவில்லை. உடனே அங்கிருந்து தப்பி பள்ளி சுவர் ஏறி குதித்து தயாராக நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார்.

உடனடியாக 108 ஆம்புல்ன்ஸ்சை வரவழைத்த மாணவர்கள் பலத்த காயமடைந்த பாஸ்கரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தப்பி ஓடிய குற்றவாளியான மாரீஸ்வரனை பிடிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் பாஸ்கரன் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைக்கவே, உடனடியாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கொலையாளி மாரீஸ்வரனை இன்று மாலையில் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+