சேலம்: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை
சேலம்: சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜஹான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.சேலத்தில் நடந்த பாஜக மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜகான் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஷாஜகான் வீட்டில் மறைத்து வைத்து இருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.பிறகு அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். நேற்றிரவு இவர் மதுபான கடைக்கு சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி சேலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் டவுன் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications