For Daily Alerts
Just In
செங்கல்பட்டு சிறையில் பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி தற்கொலை!
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் : செங்கல்பட்டு கிளைச் சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த துரை என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செயய்ப்பட்டு செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே செய்த குற்றத்திற்காக மன உளைச்சலில் துரை இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் துரை இன்று காலை சிறையில் உள்ள சமையலறையில் கயிற்றால் தூக்கிவிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றிய சிறைக் காவலர்கள் கைதி துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
English summary
Child sexual abuste accuste Durai at Chenagalpattu prison self hanged himself at proson kitchen room
Story first published: Saturday, May 6, 2017, 10:55 [IST]