எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: அவகாசம் கொடுக்கப்பட்ட பிறகே நடவடிக்கை.. சபாநாயகர் தரப்பு வாதம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் போதிய அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சபாநாயகர் தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் போதிய அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சபாநாயகர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இருவேறு தீர்ப்பு வழங்கியதால் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா முன்பு நடைபெற்று வருகிறது. இதில் சபாநாயகர் தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
இன்றைய விசாரணையின் போது, வாதிட்ட சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ததில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்றார்.
போதிய அவகாசம் வழங்கப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார். இதனிடையே எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் தரப்பு வாதம் தொடங்கவுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications