எச். ராஜா மீது தேவைப்பட்டால் நடவடிக்கை.. என்ன சொல்ல வருகிறார் அமைச்சர்?
எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.
அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானது. இதையடுத்து திருமயம் காவல்துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் ஆர்பி உதயக்குமார்
இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறுவோம்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை என்றும் இடைத் தேர்தல் நடந்தால் 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது லட்சியம் என்றும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

தேவைப்படும் போது
இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து முதல்வரும் துணை முதல்வரும் வகுத்து கொடுத்த யூகத்தின் படி நடந்து வெற்றி பெறுவோம் என்றார். மேலும் எச் ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

வேறு எப்போது?
எச் ராஜா வெட்டவெளியில் நீதித்துறையையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் தேவைப்படும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர். இப்போது இல்லாமல் வேறு எப்போது நடவடிக்கை தேவைப்படும்?

எஸ்கேப்பான எஸ்வி சேகர்
இதுபோலத்தான் தமிழக பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் பெண் செய்தியாளர் குறித்து அவதூறாக பேசிவிட்டு மாதக்கணக்கில் சட்டையில் தேசிய கொடியை குத்திக்கொண்டு எஸ்கேப்பாகி வந்தார். அவரை போலவே எச் ராஜாவும் எஸ்கேப்பாக நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவது போல் உள்ளது அமைச்சர் உதயக்குமாரின் பேச்சு.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications